சனி, 28 ஆகஸ்ட், 2010

சீனப் பெருஞ்சுவர்


பழைய உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்தது சீனப் பெருஞ்சுவர். இந்த பூமியில் மனிதனால் கட்டப்பட்ட மிக மிக நீளமான சுவர் இதுதான். இந்த சுவர் இன்று நேற்று கட்டப்பட்டதல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அப்போதெல்லாம் பெரிய அளவில் தொழில்நுட்பம் வளரவில்லை. அப்போதே இப்படியொரு பிரமாண்டத்தை படைத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்று அதிசயிக்கிறார்கள், வரலாற்று ஆசிரியர்கள்.நீண்டு உயர்ந்த மலைகள், மணற்பாலைவனங்கள், பள்ளத்தாக்குகள் என்று சுவர், பயணம் செய்யும் பகுதிகள் ஏராளம். சீனப்பெருஞ்சுவரின் நீளம் 6 ஆயிரத்து 400 கிலோ மீட்டர். கிழக்கில் ஷான்ஹாயில் தொடங்கி மேற்கில் லோப்நுர் வழியாக தென்பகுதியான மங்கோலியாவின் உட்பகுதி வரை நீண்டு செல்கிறது.இந்த சுவர் ஒரு அதிசயமாக இடம் பெற வேண்டும் என்பதற்காக கட்டப்படவில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு சீனாவுக்கு எப்போதும் எதிரிகளால் ஆபத்து இருந்து கொண்டே இருந்தது. திடீர் திடீரென்று யாராவது கையில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு குதிரை மீது ஏறி சண்டைக்கு வந்து விடுவார்கள். சீன மன்னர்களுக்கு இது ஓயாத தலைவழியாக இருந்தது. இதை எப்படி சரி செய்வது? என்று யோசித்தார்கள். கடைசியாக அரண்மனை போன்றவற்றை பாதுகாத்துக் கொள்ள அரண்போல் ஒரு கோட்டைச் சுவரை எழுப்புவார்கள். அதே போன்ற சுவர் ஒன்றை எல்லைப்பகுதியில் கட்டி விடுவது என்று முடிவெடுத்தார்கள். உடனே வேலையில் இறங்கினார்கள்.கி.பி.206-ம் ஆண்டு முதலாம் சின்வம்சத் அரசன் இதைக் கட்ட தொடங்கினார். ஒரு வருடம், இரண்டு வருடம் என்று இழுத்துக் கொண்டே போன பணி 15 வருடங்கள் கழித்து நிறைவடைந்தது. குடி மக்களில் வீட்டுக்கு ஒருவர் இந்த பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட நாட்டில் இருந்த மொத்த மக்களில் 70 சதவீதம் பேர் சுவர் கட்டுவதில் ஈடுபட்டிருந்தனர். கி.பி. 221-ல் 5 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சுவரை கட்டி முடித்தனர். இதற்கு வான்-லி- குவாங்-கெங் என்று பெயரிட்டனர். அதற்கு 5 ஆயிரம் கி.மீ. நீளமான சுவர் என்று அர்த்தம். இதன் அகலம் 4.5 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை இருந்தது. உயரம் 7.5 மீட்டர் முதல் 14 மீட்டர் வரை இருந்தது. இவ்வளவு பெரிய சுவரை கட்டியும் அவர்களுக்கு ஏனோ திருப்தி ஏற்படவில்லை.சுவரின் நீளத்தை அதிகரிக்க முடிவு செய்தார்கள். 1368-ல் இருந்து 1644 வரை ஆட்சி செய்த மிங் வம்ச மன்னர்கள் மீண்டும் சுவர் கட்டும் வேலையை தொடங்கினார்கள். 6 ஆயிரத்து 400 கி.மீ. வரை நீண்டது. இந்த சுவரில் மறு சீரமைப்பு பணி தொடங்கியது. இதுவே 200 ஆண்டுகள் வரை நீடித்தது.இந்த சுவர் சீனாவின் அடையாளம். இதைப்பார்க்க நிறைய வெளிநாட்டு பயணிகள் வருகிறார்கள். தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இருக்கும் மட்டியான்யு மற்றும் சைமைதாயு என்ற இரண்டு இடங்களில் மட்டுமே பார்வையாளர்கள் சீனப்பெருஞ்சுவரை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் உள்ள சுவர்கள் எல்லாம் ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கெல்லாம் சுற்றிப்பார்ப்பதற்கு என்று சுவரை நெருங்கினாலே உயிருக்கு ஆபத்து.சுவரில் குறிப்பிட்ட இடைவெளியில் வீரர்கள் தங்குவதற்கும், ஆயுதங்களை வைத்துக் கொள்வதற்கும் அறைகள் கட்டப்பட்டன. ஆபத்து காலங்களில் அந்த அறைகளில் இருந்து புகைபோட்டு வீரர்கள் எச்சரிக்கை விடுப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக