
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். ஆனால் மனிதனின் விலை...? மனிதனின் உடலில் என்னென்ன இருக்கிறது என்று ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். வெகுநாட்களுக்கு முன்பாக டால்ஸ்டாய் என்ற அறிஞர் மனிதனே உன் விலை என்ன? என்று கேட்டார். இந்த கேள்வி உலகப் பிரசித்தம். அந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக விஞ்ஞானிகள் விலையை சொல்கிறார்கள். ஒரு மனிதனின் உடலில் 7 பார் சோப்புகளை தயாரிக்கும் அளவுக்கு தேவையான கொழுப்பு இருக்கிறது. ஒரு சிறிய ஆணியை செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு இருக்கிறது. 5 அடிக்கு 5 அடி பரப்புளவு உள்ள 25 சதுர அடி சுவருக்கு மனிதனின் உடலில் உள்ள சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடிக்கலாம்.யாரைப்பார்த்தாலும் சர்க்கரை நோய் என்று ஓடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு சர்க்கரை தொழிற்சாலையே வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தால் ஏமாற்றம்தான். மனிதனின் உடலில் இருக்கும் சர்க்கரையைக் கொண்டு இரண்டு கப் காபியை மட்டுமே இனிப்பாக்க முடியும். பாஸ்பரஸ் மட்டும் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இந்த பாஸ்பரசை கொண்டு 2 ஆயிரம் தீக்குச்சிகள் தயாரிக்கலாம். மேலும் ஒரு சின்ன கரண்டியளவே மக்னீசியமும் உடலில் உள்ளது. இதுபோக ஒரு சின்ன பீரங்கிக் குண்டை வெடிக்க வைக்கும் அளவுக்கு தேவையான பொட்டாசியம், கொஞ்சம் கந்தகமும் உள்ளது. சரி இத்தனையும் விற்றால் என்ன விலை தேறும் என் கிறீர்களா? ரொம்ப சொற்பம்தான். இத்தனையும் சேர்த்து 100 ரூபாய்க்குள் தான் வருகிறது. அந்த வகையில் மனிதனைவிட விலங்குகள் அதிக விலை பெறுகின்றன. மனிதனின் மதிப்பு அவனது மூளைதான். அந்த சின்ன மூளையை வைத்துத்தான் மனிதன் உலகில் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கினான். அந்த மூளை விலை மதிப்பற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக