
பீர் குடிக்கும் பெண்களை தோல் நோய் தாக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். பீர் குடிக்கும் பெண்களை இந்த நோய் தாக்கும் அபாயம் 70 சதவீதம் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. வழக்கமாக பீர் குடிக்கும் பெண்களுக்கு சோரியாசிஸ் என்ற நோய் தாக்குகிறது. இந்த நோய் காரணமாக தோலில் தடிப்பு ஏற்படுகிறது. தோல் சிவந்து போகிறது. இது மொத்த மக்கள் தொகையில் 2 முதல் 3 சதவீத பெண்களை தாக்குகிறது.ஹார்வர்டு மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் 1991-ம் ஆண்டு 82 ஆயிரத்து 869 பெண்களிடம் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், பீர் குடிக்கும் பெண்களுக்கு அதை குடிக்காத பெண்களை விட சோரியாசிஸ் நோய் தாக்கும் அபாயம் 72 சதவீதம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக