திங்கள், 23 மே, 2011

உலகின் முதல் எஸ்.எம்.எஸ்.


எப்போதும் எதிலும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்கர்களின் எண்ணம். அதை பல துறைகளிலும் நிரூபித்து உள்ளனர். அப்படி இருக்கும் போது செல்போனை மட்டும் விட்டு வைப்பார்களா? உலக அளவில் செல்போனை அதிகம் பயன்படுத்துபவர்கள் என்ற பெருமை இப்போது அமெரிக்கர்கள் வசம்தான் இருக்கிறது.
சராசரியான ஒரு அமெரிக்கர் மூன்றுக்கும் மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்துகிறார்கள். பரம ஏழையாக இருந்தாலும் அதிகபட்சமாக 18 மாதங்கள்தான் ஒரு செல்போனை உபயோகிக்கிறார்கள். அதற்கு மேல் அதை உபயோகிப்பது இல்லை. இதில் 2.3 சதவீதத்தினர் மட்டுமே தங்களது பழைய செல்போனை மறு சுழற்சி செய்கிறார்கள். மற்ற எல்லோருமே செல்போனை குப்பை தொட்டியில் வீசி எறிகிறார்கள் என்று அமெரிக்க சர்வே ஒன்று சொல்கிறது.
ஒரு வருடத்திற்கும் மேலாக செல்போனை உபயோகிக்கும்போது அந்த செல்போனில் உள்ள கேட்மியம், லெட், பெரிலியம் போன்ற தனிமங்களால் நோய் எதிர்ப்பு சக்தி, நரம்பு மண்டலம், மூளை, ஈரல், நுரையீரல் போன்றவை எளிதாக பாதிக்கப்படும். இதனால் அமெரிக்காவில் அடிக்கடி செல்போனை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
தற்போதைய நிலவரப்படி 250 ஆயிரம் டன் எடை கொண்ட 55 கோடி செல்போன்கள் குப்பைத் தொட்டிக்கு வர காத்திருக்கின்றன. இந்த வருடம் மட்டும் 55 லட்சம் செல்போன்கள் புதிதாக பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. இவை கிட்டத்தட்ட 75 சதவீத உலக மக்கள் தொகைக்கு சமம் என்று சர்வதேச தகவல் தொடர்பு சம்மேளனம் தெரிவிக்கிறது.
1973ல் முதன்முறையாக செல்போனை உபயோகப்படுத்தியவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர். 1992 முதல் எஸ்.எம்.எஸ். என்ற குறுஞ் செய்தி அனுப்பும் வசதி செல்போனில் அறிமுகப்படுத்தப்பட்டது. நீல்டேப்வொர்த் என்பவர் தனது நண்பனுக்கு அனுப்பிய “மேரி கிறிஸ்துமஸ்“ என்பதுதான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ். ஆகும். இது 1992&ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24&ந் தேதி அனுப்பப்பட்டது.
இன்று அமெரிக்காவில் நாளொன்றுக்கு 5 லட்சம் எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இது மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கும் சீனா, இந்தியா போன்ற நாட்டு மக்கள் பயன்படுத்துவதை விட அதிகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக