திங்கள், 23 மே, 2011

நீந்த தெரியாத நீர்யானை

திமிங்கலம், யானை, காண்டாமிருகம் போன்ற மிருகங்களுக்கு அடுத்தபடியாக பூமியில் வாழும் நான்காவது மிகப் பெரிய மிருகம் நீர்யானை. ஆறு, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளில்தான் இவை வாழும். இவற்றின் உடலில் இருந்து சிவப்பு நிற திரவம் ஒன்று வெளியேறிக்கொண்டே இருக்கும். பகல் நேரத்தில் நீருக்குள் இருக்கும் இந்த நீர் யானைகள் இரவானதும் நிலப்பரப்புக்கு வந்து மேயத்தொடங்கி விடும். தண்ணீரில் கூட்டமாக வாழ்ந்தாலும் மேய்ச்சலுக்கு போகும்போது தனித்தனியாகத்தான் போகும்.
நீர் யானைகள் பார்ப்பதற்கு பெரிதாக தெரிந்தாலும் அதன் கால்கள் மிகவும் குட்டையானவை. இதன் எடை 1,500 முதல் 3,000 கிலோ வரை இருக்கும். மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். நீண்டதூரம் இதனால் ஓட முடியாது.
ஆப்பிரிக்க காடுகளில் இந்த இனம் உள்ளது. தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் நீர் யானைகள் இருப்பதாக கணக்கெடுத்துள்ளார்கள். நீர் யானைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று சாதாரண நீர்யானை. மற்றொன்று நைல் நீர் யானை. இது சுமார் 540 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த ஒரு மிருகம். இதன் மூதாதையர்களிடம் இருந்து இரண்டு மரபணுக்கள் உருவாகி ஒன்று திமிங்கலமாகவும், மற்றொன்று நீர் யானையாகவும் மாறின.
நீரில் வாழும் நீர் யானைகளுக்கு நீந்த தெரியாது என்பது ஆச்சரியமான ஒன்று. ஆனால் இவற்றுக்கு தனியான ஒரு வித ஈர்ப்பு விசை இருக்கிறது. அதன் துணைகொண்டு நீரின் அடியில் கூட நடக்கவும் ஓடவும் முடிகிறது. தங்களின் சிறப்பு ஈர்ப்பு விசையை பயன்படுத்தி நீருக்கு அடியில் செல்லும், மீண்டும் மேலே வரும். நீர்யானைகள் எப்போதும் நீருக்கு மேலேயே மிதந்து கொண்டு இருக்கும்.
சில நேரம் தங்கள் கால்களை உந்தி நீருக்கடியில் செல்லும். அல்லது 3 அல்லது 5 நிமிடம் வரை உள்ளேயே இருக்கும். பின் மேலே வந்து ஒருமுறை சுவாசித்து விட்டு மீண்டும் நீருக்கடியில் சென்று விடும். தண்ணீருக்கடியில் தூங்கும்போது கூட 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்ணை திறக்காமலேயே நீரின் மேல் பகுதிக்கு வந்து மூச்சுக்காற்றை வாங்கி மீண்டும் நீருக்கடியில் சென்று விடும். நீருக்கு மேலே வரும்போதுதான் இதன் மூக்கு துவாரம் திறக்கும். நீருக்குள் மூழ்கும்போது மூடிக்கொள்ளும். இவையெல்லாமே தானியங்கிபோல் கச்சிதமாக நடக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக