திங்கள், 23 மே, 2011

ஹார்ட்அட்டாக்கை தெரிவிக்கும் செல்போன்

உலக மக்கள் தொகையில் 30 சதவீத மரணங்களுக்கு ஹார்ட்அட்டாக் தான் காரணம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஒருவருக்கு ஹார்ட்அட்டாக் ஏற்பட்டவுடன், பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கி திண்டாடும் அந்த நிமிடங்கள்தான் தங்கத்தருணம். அந்த சமயம் உடனடியாக முதலுதவி அளிக்கப்படுபவர்கள் பிழைத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் எப்போது, யாருக்கு ஹார்ட்அட்டாக் வரும் என்று எப்படி கணிப்பது? அதற்கு கைகொடுக்க இருக்கிறது மினியேச்சர் ஈ.சி.ஜி.மிஷின் பொருத்தப்பட்ட செல்போன். உங்கள் சட்டைப்பாக்கெட்டில் இருக்கும் இந்த மொபைல், உங்களின் இதய துடிப்புகளை சென்சார் செய்தபடியே இருக்கும். ஹார்ட் அட்டாக் சமயம் அலர்ட் ஆகி தானாகவே மொபைலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் தகவலை டாக்டருக்கு இந்த மொபைல் அனுப்பிவிடும்.
உடனே நோயாளியையோ உறவினரையோ டாக்டர்கள் தொடர்பு கொண்டு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து விடலாம். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் அட்வான்ஸ் கம்ப்யூட்டிங் டெக்னாலஜி டைரக்டர் ஆலன்சிசெஞ்ச், உண்மையில் அவ்வளவு பெரிய ஈ.சி.ஜி.இயந்திரத்தை கையடக்கத்தில் கொண்டு வந்ததுதான் பெரியசாதனை என்கிறார்.
ஆராய்ச்சி அளவில் இருக்கும் இந்த திட்டம் வெற்றி அடைந்தால் இந்த தொழில் நுட்பத்தையும் சாப்ட்வேரையும் இலவசமாக அளிக்கப்போவதாக இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளித்து வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது வந்து விட்டால் நோயாளிகள் பற்றிய தகவல் சரியான நேரத்தில் டாக்டருக்கு போய்விடும். இதன் மூலம் அந்த ஆபத்தான தருணத்தில் இருந்து நோயாளிகள் காப்பாற்றப்படுவார்கள். இதனால் ஹார்ட்அட்டாக் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக