
மனிதன் மற்ற விலங்குகளில் இருந்து வேறுபட்டு இருக்க ஒரேயொரு காரணம் இருக்கிறது. மனிதன் என்ற ஒரு விலங்கால்தான் நிமிர்ந்து நிற்க முடியும். மற்ற உயிரினங்களால் இது முடியாது.
மனிதனும், கிப்பன் குரங்குகளும்தான் இரண்டு கால்களால் நடப்பவை. வேறு எந்த விலங்கும் பின்னங்கால்களை மட்டுமே உபயோகித்து நடப்பதில்லை. மனிதனுக்கு மிகவும் நெருங்கிய உறவான கொரில்லா கூட லேசாக கூன்விழுந்ததுபோல் முன்னோக்கி வளைந்துதான் நிற்கும். மனிதனை போல் நேர்கோடாக நிற்க முடியாது.
இந்த நிமிர்ந்த நன்னடை மனித உடலில் ஏராளமான மாற்றங்களை செய்திருக்கிறது. மற்ற நாலுகால் விலங்குகளை போல் முகம், தலையை பார்க்காமல் முன்னோக்கி நிமிரும் நிலை ஏற்பட்டது. முதுகெலும்பு, இடுப்பெலும்புகள், கால் எலும்புகளில் மாற்றம் ஏற்பட்டது. இரண்டு கால்களால் நிமிர்ந்து நடக்க, நடக்க பெருவிரல் என்ற கட்டைவிரல் வித்தியாசமான வடிவம் பெற்றது.
பின்கால்களை மட்டும் பயன்படுத்தி நடப்பதால் முன்கால்களை வேறுவிதமான வேலைகளுக்கு பயன்படுத்த முடிந்தது. அவற்றை கொண்டு பல கருவிகளை கண்டுபிடித்தான். இந்த கருவிகளின் செயல்பாட்டுக்கு வசதியாக கைவிரல்களுக்கு எதிராக கட்டைவிரல் உருமாற்றம் அடைந்தது.
சில குரங்குகளுக்கு கட்டைவிரல் இருக்கிறது. ஆனால் மனிதன் அளவுக்கு அவை முழு வளர்ச்சி பெறவில்லை. கைவிரல்களை கட்டைவிரலுக்கு எதிராக மனிதன் கொண்டு வராவிட்டால் இத்தனை கருவிகளை பயன்படுத்தியிருக்க முடியாது. கருவிகளை மனிதன் பயன்படுத்த தொடங்கியபின்தான் மூளையில் சிந்தனை பிரிவுகள் வளர்ச்சி பெற்றன.
கொரில்லாவை போல் இல்லாமல் மனித உடலில் குறைவான ரோமம் இருப்பது மற்றொரு சிறப்பாகும். மார்பிலும் உடலின் சில பகுதிகளிலும் ஓரளவு ரோமங்கள் இருந்தாலும் குரங்கைப்போல் ஒரே போர்வையாக இல்லை.
மனிதனின் கண்கள் இரண்டும் முன்னோக்கி அருகருகே அமைந்துள்ளன. இதனால் கண்களுக்கிடையே உள்ள இடைவெளி குறைந்து அலகிட்டு கூர்மையாக உள்ளது. மனித இனத்திற்கும் மற்ற இனங்களுக்கும் இது முக்கியமான வேற்றுமையாகும்.
குரங்கில் இருந்துதான் மனிதன் பரிணமித்தான் என்று டார்வின் கூறினார். இதை மதவாதிகள் எதிர்த்தனர். அறிவாளிகள் ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் மனிதனுக்கும் குரங்கிற்கும் மத்தியில் உள்ள இணைப்பு எங்கே என்று கேட்டனர். அந்த இணைப்பை கண்டுபிடிக்காமல் அதை ஒப்புக்கொள்ள முடியாது என்று கருதினர்.
ஜாவாதீவில் உராங்குட்டான் என்ற குரங்கினம் ஏராளமாக உள்ளது. டூபி என்ற டச்சுப்பேராசிரியர், குரங்கு மனிதனை கண்டுபிடிக்க ஜாவா சென்றார். ஆராய்ச்சியில் இறங்கினார். அங்கு கோலோ என்ற ஆற்றின் கரையில் திரினுல் என்ற இடத்தில் மண்டை ஓடுகளையும், தொடை எலும்புகளையும் கண்டுபிடித்தார். விடுபட்டுப்போன பரம்பரையை கண்டுபிடித்து விட்டேன் என்று அறிவித்தார்.
குரங்கினத்தில் இருந்து தோன்றிய முதல் மனிதன் இவன்தான் என்றார். அந்த மனிதனுக்கு பித்தகாந்த் ரோரெக்ட்ஸ் என்று பெயர் சூட்டினார். பித்தகேர் என்றால் கிரேக்க மொழியில் குரங்கு என்று பொருள். அந்தரோபஸ் என்றால் மனிதன் என்றும், ரெக்ட்ஸ் என்றால் நிமிர்ந்து என்றும் பொருள்படும்.
அதாவது நிமிர்ந்து நடக்கும் மனிதன் என்ற அர்த்தத்தில் மனித குலத்தின் முதல்வன் இவனே என்ற டூபி, அவனுக்கு ஜாவாமனிதன் என்றே பெயரிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக