வெள்ளி, 15 அக்டோபர், 2010

வெறி நாய்க் கடி


வெறி நாய்க் கடிமனிதனுக்கு மிகவும் நெருங்கிய விசுவாசமுள்ள விலங்கு, நாய். ஆனால் இந்த நாய்க்கு வெறிபிடித்தால் ஆபத்து. வெறிநாய்க் கடிக்கு சரியான மருத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உயிரைக்கூட இழக்க நேரிடலாம். நாய்க்கு ‘ரேபிஸ்‘ என்ற ஒரு நோய் தாக்கக்கூடும். இந்த நோய் தாக்கிய நாயையே வெறிநாய் என்கிறோம். இந்த நோய் காற்றில் வரும் சில வைரஸ்க-ளால் பரவுகிறது. நாயின் தோலில் ஏற்படும் வெட்டுக்காயம் அல்லது புண் வழியாக இந்த வைரஸ்கள் உள்ளே நுழைகின்றன. நுழைந்த வைரஸ்கள் 4 முதல் 6 வாரங்களில் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கும். அதன் விளைவாக நாய்க்கு ஜுரம் ஏற்பட்டு அசையாமல் படுத்துக் கிடக்கும். சாப்பிடாது. அந்த வைரஸ், மூளையைத் தாக்கும்போது, நாய் நிலை கொள்ளாமல் தவிக்கும். பிறகு ஒரே உறுமலும், குரைப்பதுமாக இருக்கும். வாயில் இருந்து உமிழ்நீர் நுரைத்தபடி வழியும். இந்த நேரத்தில் வளர்ப்பவரைக் கூட நாய் கடித்துக் குதறிவிடும். வெறிநாயின் நிலை இதுதான். இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஜந்தாறு நாட்களில் நாய் இறந்துவிடும். வெறிநாய், மனிதனை கடிக்கும் போது அதன் உமிழ்நீரில் கலந்துள்ள கிருமிகள் காயத்தின் வழியாக மனித உடலில் புகுந்து விடும். கடிபட்ட மனிதருக்கு முதலில் மனத்தளர்ச்சி ஏற்படும். காய்ச்சல் வரும். கவலைகள் வாட்டி எடுக்கும். தூக்கமின்மையும் வீணான பயங்களும் மனதை அவஸ்தைப்பட வைக்கும். தொண்டையில் தசைநார்கள் தளர்ந்துவிடும். உணவோ தண்ணீரோ அருந்த முடியாத நிலை ஏற்படும். தண்ணீரைப் பார்த்தாலே பயம் வரும். இதனால் இந்த நோயை ‘ஹைட்ரோ போபியோ‘ என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். அதாவது நீரை கண்டு பயப்படும் வியாதி என்று இதற்கு அர்த்தம். வெறிநாய் கடித்து ஒரு மாதம் முதல் 3 மாதத்திற்குள் இந்த அறிகுறிகள் தென்படும். கழுத்து, வாய், தலை ஆகிய பகுதிகளில் நாய் கடித்தால் இந்த நோய் விரைவிலேயே பரவி விடும். வெறிநாய் கடித்தவுடன் கடி பட்ட இடத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். மூன்று நாட்களுக்குள் ‘ஆண்டி-ரேபிஸ்‘ ஊசி போட்டு 5 நாட்கள் நாயை கண்காணிக்க வேண்டும். இதற்குள் நாய் இறக்கவில்லை என்றால் நாய் வெறிநாய் இல்லை என்பதை அறியலாம். வெறிநாய்க் கடிக்கான சிகிச்சையையும் நிறுத்திவிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக