ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

நண்பனும் -அரசியல்வாதியும்



நண்பனும் அரசியல்வாதியும்
ஒன்று தான்! தேவைப்படும் போது தான்
இருவரும் தேடி வருவார்கள்!

காலில் விழுந்து ஓட்டு கேட்பார்கள்!
பின்னர் நம் இதயத்தை
ரணமாக்கி விடுவார்கள்!

கண்ணீர் கதை விட்டு
ஆட்சியை பிடிப்பார்கள்!
பின்னர், நம்மை நடுத்தெருவிலே
விட்டு விட்டு செல்வார்கள்!

கரை வேட்டியை
தினமும் கட்டுவதால் அவர்களின்
மனதிலும் கரை புகுந்து விட்டதோ!

தோழா! தோழா! என்று
கூவி அழைத்து நம் மீதே
சேற்றை அள்ளி வீசுகிறார்களே!

தொண்டனை நம்பிய தலைவன்
தோற்றதாக சரித்திரம் இல்லை!
          ஆனால்
நண்பனை நம்பிய கர்ணன்
தோற்று தானே போனான்!

அரசியல் என்பது நாடகம் என்றால்!
அதில் நண்பன் என்பது நகைச்சுவை
பாத்திரம் தானே!

கட்சி! கட்சி! (நட்பு, நட்பு) என்று வசனம்
பேசியவர்கள்! கிழிந்த சட்டைகளுடன்
தெருவில் அழைந்தது தானே மிச்சம்!

கட்சிக்காக உயிரை விட்டவனையும்,
நட்புக்காக உயிரை விட்டவனையும்
நினைத்து பார்க்க ஒருவரும் இல்லை!

பதவியை இழந்தவன் தன்
சொந்தங்களை தான் இழக்கிறான்!

நட்பை இழந்தவன்
தன் நிம்மதியே இழக்கிறான்!

கட்சி பலருக்கு மயிர் என்றால்
நட்பு சிலருக்கு உயிர் தானே!


நான் உனக்கு எதிரியாக இருந்தாலும்
நீ எனக்கு நண்பன் தானே!

புரிந்து கொண்டால் நட்புக்குள்
பிளவுகள் இல்லை!

புரியாததால் தானே இருவரும்
கட்சியை தொடங்கி உள்ளோம்.....

நீ ஆளும் கட்சி....
நான் எதிர் கட்சி.....

நட்புடன்
பொ.த.தங்கமணி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக