புதன், 23 பிப்ரவரி, 2011

கண்ணுக்கு கண் தண்டனை


ஈரானில் ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை என்று கூறிவிட்டால் அவ்வளவுதான். குற்றவாளியை பொதுவான இடத்தில் நிறுத்தி வைத்து சுற்றிலும் மக்கள் நின்று கல்லால் அடித்துக் கொன்று விடுவார்கள்.

இதற்காகவே இது போன்ற இடங்களில் கற்களை குவியலாக வைத்து இருப்பார்கள். குற்றவாளியானவர் பெண் என்றால், மண்ணில் குழிதோண்டி மார்பளவு உயரத்துக்கு மேலே தெரியும்படி நிறுத்தி, மூடி விடுவார்கள்.

மண்ணுக்கு மேலே தெரியும் இடங்களில் கல்லால் அடிப்பார்கள். அடுத்தடுத்து தபதபவென்று வந்து விழும் கற்களால் மண்டை உடைந்து ரத்தம் கொட்டி குற்றவாளி இறந்து விடுவார்.

ஒரு வேளை ஆயுள் கெட்டி மனிதர்கள் இறக்காமல் இருந்து விட்டால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆயுள்தண்டனை கைதியாக சிறையில் இருக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானுக்கு தலிபான்கள் போல மலேசியாவுக்கு ஷரியா என்ற அமைப்பு, தப்பு செய்தால் தண்டனை கொடுக்கும். பீர் குடித்தால், ஒருவரை அடியாட்களை வைத்து அடித்தால், தண்டனை நிச்சயம் உண்டு.

பிரம்பால் அடிப்பதுதான் தண்டனை. சுற்றிலும் மக்கள் கூட்டம் நிற்க, குற்றவாளிக்கு பிரம்படி வழங்கப்படும். பிரம்பால் அடித்தே தோலை உரித்து விடுவார்கள். ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது பிரம்படி தண்டனையை பெறுகிறார்கள்.

பிரம்புக்குச்சியால் அடிப்பதற்கு முன்பே அதை உப்புத்தண்ணீரில் ஊறவைத்து விடுகிறார்கள். அப்படி செய்தால்தான் அடிக்க வசதியாக இருக்குமாம். வலியும் தாங்க முடியாத அளவுக்கு போகுமாம். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்கிற தண்டனை இன்னமும் சவுதி அரேபியாவில் உண்டு.

சவுதியில் வாழ்ந்த இந்தியர் ஒருவர், அங்கிருக்கும் அரேபிய குடிமகனோடு சண்டை போட்டார். அப்போது எதிர்பாராமல் அவரது கை சவுதி அரேபியரின் கண்ணில் பட்டு விட்டது.

கொஞ்ச நாட்களில் பார்வையும் போய்விட்டது. பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் சென்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்தியரின் கண்களை தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.

இதே போல் ஈரானிலும் ஒரு தண்டனை வழங்கப்பட்டது. 27 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் கோபத்தில் தனது அழகான காதலியின் முகத்தில் திராவகம் ஊற்றிவிட்டார். வலி பொறுக்க முடியாமல் உருக்குலைந்த முகத்தோடு நீதிமன்ற படியேறினாள், காதலி.

வழக்கை விசாரித்து முடித்த நீதிமன்றம், ஆசிட்டின் வேதனை எவ்வளவு கொடூரமானது என்பதை அந்த காதலனுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக அந்த பெண்ணின் கண் முன்பாகவே, அந்தக்காதலனின் கண்களில் சொட்டுச்சொட்டாக ஆசிட்டை ஊற்றும்படி தீர்ப்பு வழங்கியது. தண்டனை நிறைவேற்றப்பட்டது.

காதலனின் கண்களும் முகமும் காதலியை போலவே சிதைந்து போயின.
கடுமையான தண்டனைகள்தான் குற்றத்தை குறைக்கும் என்பார்கள்.

அரபு நாடுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு தயவு தாட்சண்யம் பார்க்காத இதுபோன்ற கொடூர தண்டனைகள் மிக முக்கியமான காரணமாக இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக