
சினிமாவில் நாம் பார்த்திருப்போம். பெரும்பாலும் வில்லன்கள் கடத்தல் தொழில் செய்து கோடி கோடியாக பணம் சம்பாதிப் பவர்களாக காட்டி யிருப்பார்கள். ஆனால் உண்மையில் ஒரு கடத் தல்காரன் எப்படி இருப்பான் என்பதை Ôஎஸ்கோபார்Õ என்பவனை பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். கொலம்பியா நாட்டைச் சேர்ந்த எஸ்கோபார் தன் நாட்டை மட்டு மல்லாது, அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களையும் ஆட்டிப் படைத்த வன். போதைப்பொருள் கடத்தலை பயந்து, பயந்து செய்யாமல் ஒரு பன்னாட்டு நிறுவனம் போல் அலுவலகம், தொழிற்கூடம், டீலர், சப் டீலர் என்று உலகம் முழுவதும் நியமித்து ஒரு பக்காவான தொழிலாகவே செய்து வந்தான். போதைப் பொருட்களை தரும் செடிகளை பயிரிட கொலம்பியாவில் உள்ள நிலங்கள் போதாது என்பதால், பிரேசில், பெரு, வெனிசுலா போன்ற அருகில் உள்ள நாடுகளையும் குத்தகைக்கு எடுத்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அந்த செடிகளை பயிரிட்டான்.போதைப்பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்காகவே நான்கு விமானங்களை வைத்திருந்தான். விமானங்களை இறக்கவும், ஏற்றவும் பல நாடுகளில் தனியாக விமான ஓடுதளங் களையே வைத்திருந்தான்.கொலம்பியா ஓர் ஏழை நாடு. அங்கு பலரும் வயிற்றுப்பிழைப்புக் காக பயந்து, பயந்து போதைப்பொருட்களை பயிரிட்டு கடத்தல் காரர்களுக்கு விற்று வந்தனர். எஸ்கோபார் இந்த தொழிலுக்கு வந்ததும் நிலைமையே மாறியது. இது பயந்து செய்ய வேண்டிய தொழில் இல்லை. விஞ்ஞானப்பூர்வமாக செய்ய வேண்டிய தொழில் என்று சொல்லி பல கோடி ரூபாய்களை செலவழித்து போதைப்பொருள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு என்று பரிசோதனை கூடங்களையும் நிறுவினான்.கிராம சேவகர்கள் என்ற இவனுடைய பணியாளர்கள் கிராமம் கிராமமாக சென்று ஏதோ நெல் விவசாயத்திற்கு விளக்கம் கொடுப்பதுபோல் போதை செடிகளை எப்படி பயிரிடுவது? என்ன உரம் போடுவது என்ற அனைத்து விவரங் களையும் இலவசமாக சொல்லி வந்தனர்.கொலம்பியாவின் பொருளாதாரமே போதைப் பொருளை சார்ந்திருக்கும் நிலைக்கு வந்தது. எஸ்கோபார் அனுப்பும் போதைப் பொருட்கள் அனைத்தும் அமெரிக்கர்களையும் குட்டிச் சுவராக்குகின்றன என்று கூறிய அமெரிக்கா, எஸ்கோபாரை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டது. அதனால் ஒப்புக்காக 1976-ல் எஸ்கோபாரை கொலம்பியா கைது செய்தது. சிறையில் நீச்சல்குளம் முதற்கொண்டு அவன் கேட்ட அத்தனை வசதிகளையும் அந்த சிறை மாளிகையில் செய்து கொடுத்தது. கொஞ்சநாளில் அவன் வெளியே வந்துவிட்டான்.மீண்டும் 1991-ல் அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. கொலம்பியா கோர்ட்டுக்கு எஸ்கோபார் கொண்டு செல்லப்பட் டான். அவன் நீதிமன்ற வாசலை மிதிக்கும் முன்னே அவனுக்கு எதிராக வழக்காடும் வக்கீல்கள் உள்பட அனைவரும் கொல் லப்பட்டனர்.அப்போது எங்களிடம் எஸ்கோபாரை ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா ஒற்றைக்காலில் நிற்க, இதை செய்ய முடியாத அளவுக்கு ஒரு சட்டத்தையே தனது செல்வாக்கால் எஸ்கோபார் கொண்டு வந்தான். ஆனால் எப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கும் ஒரு நாள் மோசமான சாவு உண்டு என்ற உண்மை எஸ்கோபார் வாழ்விலும் நடந்தது.1993-ல் ஒரு பெரிய ராணுவ பட்டாலியன், எஸ்கோபாரை சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டுக்கொன்றது. அதன் பின்னரே அமெரிக்காவுக்கு நிம்மதி பிறந்தது.