வெள்ளி, 29 அக்டோபர், 2010

கடத்தல் சக்கரவர்த்தி எஸ்கோபார்


சினிமாவில் நாம் பார்த்திருப்போம். பெரும்பாலும் வில்லன்கள் கடத்தல் தொழில் செய்து கோடி கோடியாக பணம் சம்பாதிப் பவர்களாக காட்டி யிருப்பார்கள். ஆனால் உண்மையில் ஒரு கடத் தல்காரன் எப்படி இருப்பான் என்பதை Ôஎஸ்கோபார்Õ என்பவனை பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். கொலம்பியா நாட்டைச் சேர்ந்த எஸ்கோபார் தன் நாட்டை மட்டு மல்லாது, அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களையும் ஆட்டிப் படைத்த வன். போதைப்பொருள் கடத்தலை பயந்து, பயந்து செய்யாமல் ஒரு பன்னாட்டு நிறுவனம் போல் அலுவலகம், தொழிற்கூடம், டீலர், சப் டீலர் என்று உலகம் முழுவதும் நியமித்து ஒரு பக்காவான தொழிலாகவே செய்து வந்தான். போதைப் பொருட்களை தரும் செடிகளை பயிரிட கொலம்பியாவில் உள்ள நிலங்கள் போதாது என்பதால், பிரேசில், பெரு, வெனிசுலா போன்ற அருகில் உள்ள நாடுகளையும் குத்தகைக்கு எடுத்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அந்த செடிகளை பயிரிட்டான்.போதைப்பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்காகவே நான்கு விமானங்களை வைத்திருந்தான். விமானங்களை இறக்கவும், ஏற்றவும் பல நாடுகளில் தனியாக விமான ஓடுதளங் களையே வைத்திருந்தான்.கொலம்பியா ஓர் ஏழை நாடு. அங்கு பலரும் வயிற்றுப்பிழைப்புக் காக பயந்து, பயந்து போதைப்பொருட்களை பயிரிட்டு கடத்தல் காரர்களுக்கு விற்று வந்தனர். எஸ்கோபார் இந்த தொழிலுக்கு வந்ததும் நிலைமையே மாறியது. இது பயந்து செய்ய வேண்டிய தொழில் இல்லை. விஞ்ஞானப்பூர்வமாக செய்ய வேண்டிய தொழில் என்று சொல்லி பல கோடி ரூபாய்களை செலவழித்து போதைப்பொருள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு என்று பரிசோதனை கூடங்களையும் நிறுவினான்.கிராம சேவகர்கள் என்ற இவனுடைய பணியாளர்கள் கிராமம் கிராமமாக சென்று ஏதோ நெல் விவசாயத்திற்கு விளக்கம் கொடுப்பதுபோல் போதை செடிகளை எப்படி பயிரிடுவது? என்ன உரம் போடுவது என்ற அனைத்து விவரங் களையும் இலவசமாக சொல்லி வந்தனர்.கொலம்பியாவின் பொருளாதாரமே போதைப் பொருளை சார்ந்திருக்கும் நிலைக்கு வந்தது. எஸ்கோபார் அனுப்பும் போதைப் பொருட்கள் அனைத்தும் அமெரிக்கர்களையும் குட்டிச் சுவராக்குகின்றன என்று கூறிய அமெரிக்கா, எஸ்கோபாரை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டது. அதனால் ஒப்புக்காக 1976-ல் எஸ்கோபாரை கொலம்பியா கைது செய்தது. சிறையில் நீச்சல்குளம் முதற்கொண்டு அவன் கேட்ட அத்தனை வசதிகளையும் அந்த சிறை மாளிகையில் செய்து கொடுத்தது. கொஞ்சநாளில் அவன் வெளியே வந்துவிட்டான்.மீண்டும் 1991-ல் அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. கொலம்பியா கோர்ட்டுக்கு எஸ்கோபார் கொண்டு செல்லப்பட் டான். அவன் நீதிமன்ற வாசலை மிதிக்கும் முன்னே அவனுக்கு எதிராக வழக்காடும் வக்கீல்கள் உள்பட அனைவரும் கொல் லப்பட்டனர்.அப்போது எங்களிடம் எஸ்கோபாரை ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா ஒற்றைக்காலில் நிற்க, இதை செய்ய முடியாத அளவுக்கு ஒரு சட்டத்தையே தனது செல்வாக்கால் எஸ்கோபார் கொண்டு வந்தான். ஆனால் எப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கும் ஒரு நாள் மோசமான சாவு உண்டு என்ற உண்மை எஸ்கோபார் வாழ்விலும் நடந்தது.1993-ல் ஒரு பெரிய ராணுவ பட்டாலியன், எஸ்கோபாரை சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டுக்கொன்றது. அதன் பின்னரே அமெரிக்காவுக்கு நிம்மதி பிறந்தது.

வியாழன், 21 அக்டோபர், 2010

புற்றுநோயை வென்றவர்



‘உங்களுக்கு புற்றுநோய் பிழைக்க வாய்ப்பே இல்லை‘, என்று டாக்டர்கள் ஒரு 25 வயது வாலிபனிடம் சொன்னால் எப்படிப்பட்ட மனிதனும் நொறுங்கி போவான். ஆனால் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் அப்படி நொறுங்க வில்லை.
வேகமாக சைக்கிள் ஓட்டும் தன் திறமையையும், இளமையையும் ஒரு வியாதிக்கு பலி கொடுப்பதா? என்று நினைத்த லான்ஸ் நம்பிக்கையோடு சிகிச்சைகளை எதிர்கொண்டு முழுமையாக குணமடைந்தார். அப்பாடா ஒரு வழியாக பிழைத்து விட்டோம், இனி நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என்று அவர் ஒதுங்கி விட வில்லை. பழையபடி மீண்டும் சைக்கிளை ஓட்ட தொடங்கினார். படிப்படியாக வெற்றிகளை குவித்தார்.
புற்றுநோயை வென்றவர் என்ற ஒரு பெருமையோடு தன் வாழ்நாள் முடிந்து விடகூடாது என்று நினைத்தார். அந்த பெருமையை ஒரு ஓரமாக தூக்கி வைத்தார். உலகின் நம்பர் ஒன் சைக்கிளிங் சாம்பியன் என்ற பட்டத்தை பெறுவதற்காக உழைத்தார். வெற்றியும் அடைந்தார்.
தன்னம்பிக்கையின் மொத்த உருவமாக அமெரிக்கர்கள் இவரை பார்க்கிறார்கள். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பிறந்த லான்சை வளர்த்தது அவருடைய அம்மா லிண்டா. 7 வயதில் சைக்கிள் ஓட்ட தொடங்கிய லான்ஸ், அடுத்த சில ஆண்டுகளிலேயே ‘ட்ரையத்லான்‘ போட்டிகளில் கலந்து கொண்டார்.
‘ட்ரையத்லான்‘ என்பது மூன்று விதமான போட்டிகளின் கலவை. ஒரு கிலோ மீட்டர் நீச்சலடிக்க வேண்டும். 15 மைல் தூரம் சைக்கிள் ஓட்ட வேண்டும். மூன்று மைல் ஓட வேண்டும். இதில் பல கோப்பைகளை சின்ன வயதிலேயே பெற்றிருக்கிறார் லான்ஸ். வெற்றிகளை தொடர்ந்து குவித்து கொண்டே இருந்த லான்ஸ்க்கு 1996&ல் தாங்க முடியாத தலைவலி, ரத்த வாந்தி. அதில் மிகவும் தளர்ந்து போனார். டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்ததில் தான் புற்று நோய் தெரியவந்தது. தனக்கென தனித்தன்மை வாய்ந்த எதிர்காலத்தை தேடி கொண்டு இருக்கும் ஒரு இளைஞனுக்கு இதை விட அதிர்ச்சியளிக்கும் செய்தி வேறு எதுவும் இருக்க முடியாது. பிழைக்க மாட்டீர்கள் என்று சொன்ன டாக்டர்களுக்கு லான்ஸ் உறுதியாக கூறிய பதில் இது தான்.
இந்த அல்ப கேன்சருக்காக நான் என் லட்சியத்தை மாற்றி கொள்ள முடியாது. அதிலிருந்து குணமடைந்து பின் மீண்டும் சைக்கிள் ஓட்டி நான் உலகின் நம்பர் ஒன் வீரனாக வரவேண்டும். அதற்கான வாய்ப்புகள் பாதிக்காதபடி எனக்கு சிகிச்சை கொடுங்கள் என்றார்.
சில மாதங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல் அளவில் மிகவும் தளர்ந்து போயிருந்த போதும் நம்பிக்கை இழக்காமல் எல்லாவற்றையும் பொறுமையாக தாங்கி கொண்டு காத்திருந்தார். 1997-ல் கேன்சரில் இருந்து பூரணமாக குணம் அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். லான்ஸ் மீண்டும் தன் சைக்கிளை எடுத்தார். தினமும் பயிற்சி செய்தார். போட்டிகளில் கலந்து கொண்டார். ஆனால் வெற்றி பெற
முடியவில்லை. ஆனாலும் உலகம் அவரை வெற்றியாளராகவே பார்த்தது.
கடுமையான புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்தளவுக்கு விளையாடுவதே மிக பெரிய விஷயம் என்று பெருமையான செய்திகள் வெளிவந்தன. லான்ஸ் இது போன்ற பெருமைகளை வெறுத்தார். தன்னை பார்த்து யாரும் உச்சுக்கொட்ட வேண்டியதில்லை. கைதட்ட வேண்டும் என்று விரும்பினார். அதற்காக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தார்.

உழைப்பு வீண் போகவில்லை. 1999-ல் சைக்கிளிங்கில் உலக கோப்பையாக கருதப்படும் ‘டூர் டி பிரான்ஸ்‘ என்ற போட்டியில் லான்ஸ் முதலிடத்தை பிடித்தார். வெற்றி என்றால் சாதாரண வெற்றியல்ல. புற்றுநோய் வந்தவர்களுக்கு அடுத்து வாழ்க்கையில் எதுவுமே கிடையாது என்ற பழைய பஞ்சாகத்தின் மீது விழுந்த சம்மட்டி அடி.
புற்றுநோய் வருவதற்கு முன்பு லான்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. ஆனால் அதிலிருந்து குணமான பிறகு சவாலான இந்த பந்தயத்தில் ஒரு முறையல்ல, தொடர்ந்து ஏழு முறை வென்று 1999ல் இருந்து 2005 வரையிலான எல்லா கோப்பைகளையும் ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அள்ளி சென்றார். ஏழாவது முறை ‘டூர் டி பிரான்ஸ்‘ கோப்பையை பெற்று சரித்தரம் படைத்த லான்ஸ் தான் ஓய்வு பெற போவதாக அறிவித்தார்.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

வெறி நாய்க் கடி


வெறி நாய்க் கடிமனிதனுக்கு மிகவும் நெருங்கிய விசுவாசமுள்ள விலங்கு, நாய். ஆனால் இந்த நாய்க்கு வெறிபிடித்தால் ஆபத்து. வெறிநாய்க் கடிக்கு சரியான மருத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உயிரைக்கூட இழக்க நேரிடலாம். நாய்க்கு ‘ரேபிஸ்‘ என்ற ஒரு நோய் தாக்கக்கூடும். இந்த நோய் தாக்கிய நாயையே வெறிநாய் என்கிறோம். இந்த நோய் காற்றில் வரும் சில வைரஸ்க-ளால் பரவுகிறது. நாயின் தோலில் ஏற்படும் வெட்டுக்காயம் அல்லது புண் வழியாக இந்த வைரஸ்கள் உள்ளே நுழைகின்றன. நுழைந்த வைரஸ்கள் 4 முதல் 6 வாரங்களில் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கும். அதன் விளைவாக நாய்க்கு ஜுரம் ஏற்பட்டு அசையாமல் படுத்துக் கிடக்கும். சாப்பிடாது. அந்த வைரஸ், மூளையைத் தாக்கும்போது, நாய் நிலை கொள்ளாமல் தவிக்கும். பிறகு ஒரே உறுமலும், குரைப்பதுமாக இருக்கும். வாயில் இருந்து உமிழ்நீர் நுரைத்தபடி வழியும். இந்த நேரத்தில் வளர்ப்பவரைக் கூட நாய் கடித்துக் குதறிவிடும். வெறிநாயின் நிலை இதுதான். இந்த அறிகுறிகள் தென்பட்டால் ஜந்தாறு நாட்களில் நாய் இறந்துவிடும். வெறிநாய், மனிதனை கடிக்கும் போது அதன் உமிழ்நீரில் கலந்துள்ள கிருமிகள் காயத்தின் வழியாக மனித உடலில் புகுந்து விடும். கடிபட்ட மனிதருக்கு முதலில் மனத்தளர்ச்சி ஏற்படும். காய்ச்சல் வரும். கவலைகள் வாட்டி எடுக்கும். தூக்கமின்மையும் வீணான பயங்களும் மனதை அவஸ்தைப்பட வைக்கும். தொண்டையில் தசைநார்கள் தளர்ந்துவிடும். உணவோ தண்ணீரோ அருந்த முடியாத நிலை ஏற்படும். தண்ணீரைப் பார்த்தாலே பயம் வரும். இதனால் இந்த நோயை ‘ஹைட்ரோ போபியோ‘ என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். அதாவது நீரை கண்டு பயப்படும் வியாதி என்று இதற்கு அர்த்தம். வெறிநாய் கடித்து ஒரு மாதம் முதல் 3 மாதத்திற்குள் இந்த அறிகுறிகள் தென்படும். கழுத்து, வாய், தலை ஆகிய பகுதிகளில் நாய் கடித்தால் இந்த நோய் விரைவிலேயே பரவி விடும். வெறிநாய் கடித்தவுடன் கடி பட்ட இடத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். மூன்று நாட்களுக்குள் ‘ஆண்டி-ரேபிஸ்‘ ஊசி போட்டு 5 நாட்கள் நாயை கண்காணிக்க வேண்டும். இதற்குள் நாய் இறக்கவில்லை என்றால் நாய் வெறிநாய் இல்லை என்பதை அறியலாம். வெறிநாய்க் கடிக்கான சிகிச்சையையும் நிறுத்திவிடலாம்.