புதன், 24 மார்ச், 2010

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய தந்தை- மகள்


நாகை மாவட்டம், சீர்காழியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 36). இவர் சீர்காழி நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் சுபஸ்ரீதேவி (15), சீர்காழி அருகே உள்ள வடகால் ரஹ்மானியா உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
9-ம் வகுப்பு வரை படித்துள்ள மாரிமுத்து, சாலை பணியில் உயர்பதவி அடைய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத நினைந்தார். இதனையடுத்து மாரிமுத்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத விண்ணப்பம் செய்தார். பின்னர் அவருக்கு தேர்வு எழுத அழைப்பு வந்தது. இதனை தொடர்ந்து 24-ந்தேதி தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மாரிமுத்து சீர்காழி எல்.எம்.சி. மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திலும், மகள் சுபஸ்ரீதேவி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வு எழுதினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக