ஞாயிறு, 18 மார்ச், 2012

கார் திருட்டு

இப்போது வரும் நவீன விலை  உயாந்த கார்களில் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் செய்யப்படும் தொழில் நுடபங்கள், கார் திருடுவதை எளிதாக்கி விடுவதாக ஆய்வு செய்து தெரிவித்துள்ளனர்.


காரை பாதுகாக்க சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் இருந்தால் போதும். கூடுதல் பாதுகாப்புக்கு ஸ்டீயரிங் வீலை லாக் செய்தால் போதும் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் மீறி உங்கள் கார் தானாக ஸ்டார்ட் ஆனால்... நீங்கள் பிரேக்கை அழுத்தாமலே கார் பிரேக் பிடித்தால்... கார் மியூசிக் சிஸ்டம் தானாக பாட ஆரம்பித்தால்....? இதெல்லாம் நடக்கும் என்கிறார்கள், வாஷிங்டன் பல்கலைக் கழக ஆய்வு மாணவர்கள்.

மிக விலை உயர்ந்த நவீன கார்களில் பல அம்சங்கள் கம்ப்யூட்டர் புரோகிராம்களின் அடிப்படையில் இயங்குகின்றன.  இந்த கம்ப்யூட்டர்களை பிற கம்ப்யூட்டர்களைப்போலவே ஹாக் செய்ய முடியும். இதனை கொண்டு உங்கள் காரின் கடடுப்பாட்டை வேறு ஒரு கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்ள முடியும். காரில் பாடிக்கொண்டிருக்கும் பாட்டை திடீரென்று நிறுத்தி வேறு ஒரு பாட்டை பாட வைக்கவும், காரின் பிரேக்கை பிடிக்க வைக்கவும் எங்கேயோ உள்ள ஒரு முகம்தெரியாத நபரால் முடியும். இதை கார் ஹேக்கிங் என்கிறார்கள்.


கார்களில் இப்போது ப்ளூ டூத், பென் டிரைவ், வை-பை போன்ற பல வசதிகள் வந்துவிட்டன. இதில் பென் டிரைவ் மூலமாகவோ, அல்லது ப்ளூ டூத் மூலமாகவோ இணைப்பை ஏற்படுத்தி காரில் உள்ள எலக்ட்ரானிக் விஷயங்களை கட்டுப்படுத்த முடியும் என்று கூறுகிறார்கள் அந்த பல்கலைக்கழக மாணவர்கள்.

இதை வெறும் ஆய்வு, அறிக்கையோடு நிறுத்தி விடாமல், பல்கலைக்கழகத்திற்கு சில கார்களை கொண்டு வந்து நிறுத்தி அந்த கார்களை ஹேக் செய்து காட்டி காரின் உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர்.

இந்த செய்தி காட்டுத்தீயாக பரவி, கார் உரிமையாளர்களை உலகெங்கும் பயமுறுத்தியது. அதிர்ந்து போன கார் நிறுவனங்கள், காரின் எலக்ட்ரானிக் சிஸ்டத்திற்குள் அவ்வளவு சுலபமாக யாரும் நுழைந்து விட முடியாது. அது உச்சகட்ட பாதுகாப்புடன் புரோக்ராம் செய்யப்படுகிறது என்று விளக்கம் கொடுத்தன. ஆனாலும் இந்த ஹேக்கிங்கில் இருந்து தங்கள் தயாரிப்பு கார்களை பாதுகாக்க பல்வேறு ஆய்வுகளில் இறங்கியுள்ளன, கார் நிறுவனங்கள்.